தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழான உந்தன் திருவாய் மலர்ந்து
தமிழென்னும் ஓர்மொழி தந்தாய் - அமிழ்தம்போல்
இந்த வியவாண்டு இனிதாய் மலரட்டும்
கந்தா அருளைக் கொடு.
செழிப்பான செந்தமிழை சொன்ன முனிவன்
வழிவந்த செந்தமிழர் வாழ்க - மொழியாம்
இமிழாலே நாமிங்கு இணைந்தே இருக்க
தமிழ்தானே என்றும் துணை.
மயக்கும் தமிழினை மற்றவரும் பார்த்து
வியக்கும் படிவளர வித்திடுவோம் - பயந்த
அயரா உழைப்பின் அருமைப் பலனை
வியவாண்டில் பெற்றிட வாழ்த்து.
வியவாண்டில் இன்புற்று விண்ணெட்டும் வண்ணம்
நயம்பெற்று நம்முடைய நண்பர்கள் வாழ்வும்
உயரட்டும் சொன்னேன்நல் வாழ்த்து.
இறக்கட்டும் நம்மை இழித்திடும் செய்கை
பிறக்கட்டும் இந்நாள் புத்தாண்டு வாழ்வும்
சிறக்கட்டும் என்றும் செழித்து.
இமிழ்போல் தமிழால் இராமகி நீயும்
அமிழ்தென வெண்பா அளித்தாய் - தமிழர்
வணங்கும் தமிழாலே வாழ்த்த வயதின்றி
வணங்கினேன் என்னையும் வாழ்த்து.
பல்காப் பியந்தந்த பன்மொழியுந் தோன்றும்முன்
தொல்காப் பியந்தந்த தொன்மொழி - செல்வம்
இமிழ்ந்து பெருவாழ்வை இவ்வுலகம் காண
தமிழே வருவாய் துணை.
சிமிழ்கண்ணின் பேச்சோ சிறுமழலைப் பேச்சோ
அமிழ்தமாய் நெஞ்சில் இனிக்கும் - தமிழர்
வசந்தமாய் வாழ வியவாண்டில் சந்த
வசந்தமே எங்களை வாழ்த்து.
எத்திசைக்கும் ஆண்டவனே எல்லனே எவ்வுயிர்க்கும்
வித்தே பரம்பொருளே வல்லோனே - பித்தனேயென்
அத்தா உனைநானும் அன்புடன் கேட்கிறேன்
புத்தாண்டில் வாழ்த்தும் படி.
கேணி நிறைந்து கதிர்வாழ துப்பாரைப்
பேணிநல் வாழ்வளித்துப் புத்தாண்டில் - வாணி
தமிழ்தந்த வாய்மலர்ந்து தாய்நீயும் வாழ்த்தொன்று
உமிழ்ந்தால் அதில்வாழும் உலகு.
நூறாண்டு காலம்தான் நீவாழ வேண்டுமே
வேறென்ன நானிங்கு வேண்டுவது – பேறுபெற்றேன்
இம்மையில் நான்கண்ட இயவுள் உனைக்காண
அம்மாநீ வாழ்த்தி அருள்.
அள்ள முடியாத அன்பைப் பொழிந்தாயே
உள்ளம் எனச்சொல்வ துன்னுள்ளம் - பிள்ளைநான்
இம்மையும் எம்மையும் உன்னுடனே தானிருக்க
அம்மாநீ வாழ்த்தி அருள்.
முத்தமிழும் நான்பேச மூலமாய் ஆனவளே
புத்தாண்டில் உன்புகழைப் பாடுகிறேன் - எத்தாலும்
நிம்புகழைப் பாட நினைத்தாலும் மாட்டாதே
அம்மாநீ வாழ்த்தி அருள்.
தமிழென்னும் ஓர்மொழி தந்தாய் - அமிழ்தம்போல்
இந்த வியவாண்டு இனிதாய் மலரட்டும்
கந்தா அருளைக் கொடு.
செழிப்பான செந்தமிழை சொன்ன முனிவன்
வழிவந்த செந்தமிழர் வாழ்க - மொழியாம்
இமிழாலே நாமிங்கு இணைந்தே இருக்க
தமிழ்தானே என்றும் துணை.
மயக்கும் தமிழினை மற்றவரும் பார்த்து
வியக்கும் படிவளர வித்திடுவோம் - பயந்த
அயரா உழைப்பின் அருமைப் பலனை
வியவாண்டில் பெற்றிட வாழ்த்து.
வியவாண்டில் இன்புற்று விண்ணெட்டும் வண்ணம்
நயம்பெற்று நம்முடைய நண்பர்கள் வாழ்வும்
உயரட்டும் சொன்னேன்நல் வாழ்த்து.
இறக்கட்டும் நம்மை இழித்திடும் செய்கை
பிறக்கட்டும் இந்நாள் புத்தாண்டு வாழ்வும்
சிறக்கட்டும் என்றும் செழித்து.
இமிழ்போல் தமிழால் இராமகி நீயும்
அமிழ்தென வெண்பா அளித்தாய் - தமிழர்
வணங்கும் தமிழாலே வாழ்த்த வயதின்றி
வணங்கினேன் என்னையும் வாழ்த்து.
பல்காப் பியந்தந்த பன்மொழியுந் தோன்றும்முன்
தொல்காப் பியந்தந்த தொன்மொழி - செல்வம்
இமிழ்ந்து பெருவாழ்வை இவ்வுலகம் காண
தமிழே வருவாய் துணை.
சிமிழ்கண்ணின் பேச்சோ சிறுமழலைப் பேச்சோ
அமிழ்தமாய் நெஞ்சில் இனிக்கும் - தமிழர்
வசந்தமாய் வாழ வியவாண்டில் சந்த
வசந்தமே எங்களை வாழ்த்து.
எத்திசைக்கும் ஆண்டவனே எல்லனே எவ்வுயிர்க்கும்
வித்தே பரம்பொருளே வல்லோனே - பித்தனேயென்
அத்தா உனைநானும் அன்புடன் கேட்கிறேன்
புத்தாண்டில் வாழ்த்தும் படி.
கேணி நிறைந்து கதிர்வாழ துப்பாரைப்
பேணிநல் வாழ்வளித்துப் புத்தாண்டில் - வாணி
தமிழ்தந்த வாய்மலர்ந்து தாய்நீயும் வாழ்த்தொன்று
உமிழ்ந்தால் அதில்வாழும் உலகு.
நூறாண்டு காலம்தான் நீவாழ வேண்டுமே
வேறென்ன நானிங்கு வேண்டுவது – பேறுபெற்றேன்
இம்மையில் நான்கண்ட இயவுள் உனைக்காண
அம்மாநீ வாழ்த்தி அருள்.
அள்ள முடியாத அன்பைப் பொழிந்தாயே
உள்ளம் எனச்சொல்வ துன்னுள்ளம் - பிள்ளைநான்
இம்மையும் எம்மையும் உன்னுடனே தானிருக்க
அம்மாநீ வாழ்த்தி அருள்.
முத்தமிழும் நான்பேச மூலமாய் ஆனவளே
புத்தாண்டில் உன்புகழைப் பாடுகிறேன் - எத்தாலும்
நிம்புகழைப் பாட நினைத்தாலும் மாட்டாதே
அம்மாநீ வாழ்த்தி அருள்.