உணர்வுகள்
ஊரடலை வாயிற் வழங்குமொழி செந்தமிழ்
பார்புகழும் மென்பொருள் பாத்திரமாம் – பாரதனி
லெல்லா மறிந்த அவையோர் தமக்கதிகங்
கல்லாதா னின்வணக்கங் கள்.
வெண்பா வெழுதலா மொன்றுந் தெரியாதே
யெண்ண மிருக்கு தெழுதிட – நண்பர்கள்
சொல்லித்தந் தாலெழுதச் செய்வேனன் போடழைத்த
எல்லார்க்கும் நன்றிசொல் லி.
வெண்பா யெழுதுவதாய் வெங்காயஞ் சொல்லவோ
ரெண்ண மெழுந்ததென் னுள்ளேதான் - மண்போற்றுஞ்
செந்தமிழில் வெண்பா சிறப்பதைப் பார்த்திங்கு
வந்தனஞ் சொல்லவந் தேன்.
அரைநொடியில் பாட்டு மெழுதிடலாங் கங்கு
கரையில்லாச் செந்தமிழைக் கொண்டு – விரைவாக
என்போலே யுள்ளோர்க் கெளிதாகச் சொல்லுங்கள்
வெண்பாவுக் கென்ன விதி.
எல்லோர்க்கும் நன்றி எடுத்தெனக்குச் சொன்னதற்
கெல்லாவெண் பாவு மிருக்கணுமா நாலுவரி
கல்லாதா னிஞ்சந்தே கம்.
நான்காம் வரியிலே நான்கு பெரியசொல்
ஆங்கே வருவது அபத்தமா ஆசையாய்
நான்கா டுவாழும் நந்திமேல் வீற்றானை
பாங்காக வைத்தொரு பாட்டையும் நன்றாக
நான்குவரி மேலெழுதி னால்.
மிரண்டோடச் செய்யும் மிகுந்த விதிகள்
இரண்டாம் வரியின் இறுதிச்சொல் லுக்கு
பொருந்தா முதற்சொல்லும் பெற்றிவ் விதிக்கு
முரணாய் குறுகோடு மில்லாது பாட்டொன்று
இருந்தால் அதுதவறா அப்பாட்டில் தப்பாது
இருந்திடு மேயின் னிசை.
தடுக்காத செந்தமிழின் தாயென்னும் வாணி
அடிப்போற்றி நாயேன் அடியேன் - படிப்பறிவு
இல்லாம லிதுநாள் வரைநான் எழுதியது
எல்லாம்வெண் பாயில்லை யா.
விலகாத ஓசை விதிதவறா வண்ணம்
பலமாக வைத்துநான் பாட - உலகிற்கு
இதுவெண்பாட் டில்லையெனில் கல்லாத நானும்
எதுவெண்பாட் டென்றறிவ து.
கங்குபோல் சூடான கிள்ளியின் பாட்டில்
அங்கிங்கு கொஞ்கம் தளைதட்ட மாற்றியே
தங்கத் தமிழின் இனிமை மறந்து
பங்கம் விளைவிக்கும் பாவிகளே – உங்கள்
பிறப்புயர்ந்த தேதமி ழாலென் றறிவீர்
இறக்கும்போ தேனு மினியென்று கொண்டேன்
குறையு மிருந்தாலேக் கூறு.
பழுதில்லை உண்மைப் பகருங்கால் நானிங்
கெழுதியவை யெல்லாம்வெண் பா.
விந்தை உலகில் வியக்காத நாளில்லை
அந்தமில்லாச் செந்தமிழி னங்கதனை - எந்தையாங்
கந்தன் அருளால் கவிபாடச் சந்தவ
சந்தத்தில் கற்றேன் சிறிது.
வெங்காயம் சொல்லது வெந்தணலா யுள்ளது
இங்காரைச் சொன்னாரோ யானறியேன் - மங்காத
செந்தமிழில் சொன்னார் சினம்தெறிக்க அன்னார்தான்
என்பிழையோ என்றே இயம்பு.
ஈரா றடிமேல் இனியவெண் டளையொடு
சீரான ஓசையும் செப்பலாய் - நேராக
வந்தப்பாட் டேகலி வெண்பா எனப்படும்
இந்தப்பா வெற்றுக்க லி.
வெள்ளைக் குரியது வெண்டளை மட்டுமே
உள்ளதைச் சொல்லி விளக்கவா - வெள்ளைக்
கலிக்குண்டு துள்ளும் கலித்தளை என்ப
கலிவெண்பாட் டிற்குக் கலித்தளை ஆகா
கலிவெண்பா வெள்ளைக் குடும்பத் தொடுக்கம்
கலிப்பா வகைவெண் கலி.
எழில்கொஞ்சு மீழத் தெரிவெங்கா யந்தாம்
பழிக்கவே தோயெந்தம் பாவம் - விழிக்கிறே
னென்றுமே மந்தன்னா னென்னுடைய சிற்றறிவிற்
கொன்றும் விளங்கவில் லை.
பார்புகழும் மென்பொருள் பாத்திரமாம் – பாரதனி
லெல்லா மறிந்த அவையோர் தமக்கதிகங்
கல்லாதா னின்வணக்கங் கள்.
வெண்பா வெழுதலா மொன்றுந் தெரியாதே
யெண்ண மிருக்கு தெழுதிட – நண்பர்கள்
சொல்லித்தந் தாலெழுதச் செய்வேனன் போடழைத்த
எல்லார்க்கும் நன்றிசொல் லி.
வெண்பா யெழுதுவதாய் வெங்காயஞ் சொல்லவோ
ரெண்ண மெழுந்ததென் னுள்ளேதான் - மண்போற்றுஞ்
செந்தமிழில் வெண்பா சிறப்பதைப் பார்த்திங்கு
வந்தனஞ் சொல்லவந் தேன்.
அரைநொடியில் பாட்டு மெழுதிடலாங் கங்கு
கரையில்லாச் செந்தமிழைக் கொண்டு – விரைவாக
என்போலே யுள்ளோர்க் கெளிதாகச் சொல்லுங்கள்
வெண்பாவுக் கென்ன விதி.
எல்லோர்க்கும் நன்றி எடுத்தெனக்குச் சொன்னதற்
கெல்லாவெண் பாவு மிருக்கணுமா நாலுவரி
கல்லாதா னிஞ்சந்தே கம்.
நான்காம் வரியிலே நான்கு பெரியசொல்
ஆங்கே வருவது அபத்தமா ஆசையாய்
நான்கா டுவாழும் நந்திமேல் வீற்றானை
பாங்காக வைத்தொரு பாட்டையும் நன்றாக
நான்குவரி மேலெழுதி னால்.
மிரண்டோடச் செய்யும் மிகுந்த விதிகள்
இரண்டாம் வரியின் இறுதிச்சொல் லுக்கு
பொருந்தா முதற்சொல்லும் பெற்றிவ் விதிக்கு
முரணாய் குறுகோடு மில்லாது பாட்டொன்று
இருந்தால் அதுதவறா அப்பாட்டில் தப்பாது
இருந்திடு மேயின் னிசை.
தடுக்காத செந்தமிழின் தாயென்னும் வாணி
அடிப்போற்றி நாயேன் அடியேன் - படிப்பறிவு
இல்லாம லிதுநாள் வரைநான் எழுதியது
எல்லாம்வெண் பாயில்லை யா.
விலகாத ஓசை விதிதவறா வண்ணம்
பலமாக வைத்துநான் பாட - உலகிற்கு
இதுவெண்பாட் டில்லையெனில் கல்லாத நானும்
எதுவெண்பாட் டென்றறிவ து.
கங்குபோல் சூடான கிள்ளியின் பாட்டில்
அங்கிங்கு கொஞ்கம் தளைதட்ட மாற்றியே
தங்கத் தமிழின் இனிமை மறந்து
பங்கம் விளைவிக்கும் பாவிகளே – உங்கள்
பிறப்புயர்ந்த தேதமி ழாலென் றறிவீர்
இறக்கும்போ தேனு மினியென்று கொண்டேன்
குறையு மிருந்தாலேக் கூறு.
பழுதில்லை உண்மைப் பகருங்கால் நானிங்
கெழுதியவை யெல்லாம்வெண் பா.
விந்தை உலகில் வியக்காத நாளில்லை
அந்தமில்லாச் செந்தமிழி னங்கதனை - எந்தையாங்
கந்தன் அருளால் கவிபாடச் சந்தவ
சந்தத்தில் கற்றேன் சிறிது.
வெங்காயம் சொல்லது வெந்தணலா யுள்ளது
இங்காரைச் சொன்னாரோ யானறியேன் - மங்காத
செந்தமிழில் சொன்னார் சினம்தெறிக்க அன்னார்தான்
என்பிழையோ என்றே இயம்பு.
ஈரா றடிமேல் இனியவெண் டளையொடு
சீரான ஓசையும் செப்பலாய் - நேராக
வந்தப்பாட் டேகலி வெண்பா எனப்படும்
இந்தப்பா வெற்றுக்க லி.
வெள்ளைக் குரியது வெண்டளை மட்டுமே
உள்ளதைச் சொல்லி விளக்கவா - வெள்ளைக்
கலிக்குண்டு துள்ளும் கலித்தளை என்ப
கலிவெண்பாட் டிற்குக் கலித்தளை ஆகா
கலிவெண்பா வெள்ளைக் குடும்பத் தொடுக்கம்
கலிப்பா வகைவெண் கலி.
எழில்கொஞ்சு மீழத் தெரிவெங்கா யந்தாம்
பழிக்கவே தோயெந்தம் பாவம் - விழிக்கிறே
னென்றுமே மந்தன்னா னென்னுடைய சிற்றறிவிற்
கொன்றும் விளங்கவில் லை.